இன்று ‘வீர் சக்ரா விருது’ பெறும் அபிநந்தன்!!
Nov 22, 2021, 11:08 IST
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தில் வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.நடப்பாண்டில் இதனை ஈடு செய்யும் வகையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கான விருதுகள் இன்று ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2019ல் பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு பீர் சக்ரா விருது வழங்கி இன்று கௌரவப்படுத்தப்படுகிறார். மேலும் மேஜர் விபூதி சங்கரின் வீர தீர செயலுக்காக சௌரிய சக்ரா விருது அவரது மரணத்திற்குப் பிறகு வழங்கப்படுகிறது.