5 வயது முதல் கொரோனா தடுப்பூசி!! உடனடி அமல்!!

 


இந்தியாவில் கொரோனா பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் திரும்பவும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.குறிப்பாக இஸ்ரேலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு.இதனால் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தி வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் அனைத்துக்கும் இஸ்ரேல் முன்னோடியாக உள்ளது.


2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அதிரடியாக அறிவித்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.சமீபத்தில் ஏற்பட்ட பரவலில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம்.

இதனையடுத்து 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும், குழந்தைகளுக்கு ஜனவரி 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் எனவும், அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.