மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா- பதற்றத்தில் உலகநாடுகள்..!

 

இந்தியா உட்பட ஒருசில நாடுகளில் தடுப்பூசி பணிகள் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் அதேவேளையில், உலகநாடுகளில் பலவற்றில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நேற்றைய நிலவரப்படி 44,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9,889,926-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 49 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,43,972-ஆக உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.