30 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயல்..! வைரல் வீடியோ!!

 

சீனாவில் இருந்து தோன்றிய வைரஸ் உலகம் முழுவதும் இன்னும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக சீனாவில் அதிபயங்கரமாக புழுதி புயல் வீசி வருகிறது. இதனால் கடுமையான வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. டுன்ஹுவாங் நகரில் 330 அடி உயரத்துக்கு உருவான ராட்சத புழுதி புயல் வானில் பிரமாண்ட மண் சுவர் கட்டியெழுப்பப்பட்டது போல் காட்சியளித்தது.

வடக்கில் இருந்து தென் திசை நோக்கிச் சென்ற புழுதி புயல் தேசிய நெடுஞ்சாலையை மூடி மறைத்தது. 5 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்களை கூட காண முடியாத சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கார்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.