தனக்கு தானே திருமணம்.!! 3 மாதங்களில் விவகாரத்து- பெண் விநோதம்..!!

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிரிஸ் கலேரா (33). கடந்த கால வாழ்க்கையில் அவருக்கு பல பிரேக்-அப் நடந்துள்ளதால், இனி தனியாக வாழலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அதன் காரணமாக கடந்த செப்டமர் மாதம் தன்னை தானே மாடல் கிரிஸ் கலேரா திருமணம் செய்துகொண்டார். கத்தோலிக்க முறைப்படி இவருடைய திருமணம் தேவாலயத்தில் நடந்தது.

அதற்கு அவருடைய குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வந்து கிரிஸ் கலேராவின் வினோத திருமணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணமான 90 நாட்களில் தனக்கு தான்வே விவகாரத்து கொடுத்து கொண்டார். மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. எனக்கான ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துள்ளது. அதனால் என்னை நானே விவகாரத்து செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மாடல் கிரிஸ் கலேராவின் நடவடிக்கை பலரையும் விநோதமடையச் செய்துள்ளது.