நடிகை அஞ்சலி சினிமாவை விட்டு விலக முடிவு ?!

 
நடிகை அஞ்சலி சினிமாவை விட்டு விலக முடிவு ?!


தமிழ் திரையுலகில் தமது நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்த கதாநாயகிகளில் நடிகை அஞ்சலி குறிப்பிடத்தக்கவர். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நடிகை அஞ்சலி சினிமாவை விட்டு விலக முடிவு ?!

அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார்.தற்போது அஞ்சலிக்கு 34 வயது. சில காலங்களுக்கு முன்பு நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளிவந்து பெரும் வைரலாகின.

நடிகை அஞ்சலி சினிமாவை விட்டு விலக முடிவு ?!

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அஞ்சலி விடுத்த செய்திக்குறிப்பில் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

நடிகை அஞ்சலி சினிமாவை விட்டு விலக முடிவு ?!

இந்நிலையில் அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க இருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் புதிய தகவல் தற்போது தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது.ஆனால் நடிகை அஞ்சலி தரப்பில் இன்னும் உறுதி செய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web