‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா

 
‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக உள்ளது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா

அந்த வகையில் தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமாகி, நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் தனது பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தற்போது குணமடைந்து வரும் நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சம்யுக்தா ஹெக்டே தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா
From around the web