பாலிவுட்டில் அடுத்தடுத்து கொரோனா!இப்போ இவருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
பாலிவுட்டில் அடுத்தடுத்து கொரோனா!இப்போ இவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலருக்கும் சமீபமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அடுத்தடுத்து கொரோனா!இப்போ இவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை முன்பைவிட தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு என்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு புள்ளி வரை அதிகரித்து பின்னர் தான் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது அலையில் பிரபலங்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகை ஆலியா பட்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அடுத்தடுத்து கொரோனா!இப்போ இவருக்கு கொரோனா தொற்று உறுதி!


ஏற்கனவே நடிகர்கள் ஆமிர்கான், ரன்பீர் கபூர், மிலிந்த் சோமன், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது ஆலியாவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அடுத்தடுத்து கொரோனா!இப்போ இவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுகுறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரொனா தொற்றுக்கு தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல ஹிட் படங்களில் நடித்துள்ள ஆலியா பட் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடித்து வந்தார் என குறிப்பிடத்தக்கது.

From around the web