விபத்தில் சிக்கி, சுய நினைவை இழந்த பிரபல நடிகர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

 
விபத்தில் சிக்கி, சுய நினைவை இழந்த பிரபல நடிகர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனுமான நடிகர் சாய் தரம் தேஜ் சாலை விபத்து ஒன்றில் சிக்கி, தன் சுயநினைவை இழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான தேஜ், ரே, சுப்ரமணியம் பார் சேல், தேஜ் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விபத்தில் சிக்கி, சுய நினைவை இழந்த பிரபல நடிகர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் நேற்றிரவு இவர் ரைடு சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தூக்கி வீசப்பட்டு விபத்திற்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட சாய், சுயநினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய் சரம் தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை கேட்டதுமே அவரது தாய் மாமாக்களில் ஒருவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர். சுயநினைவை இழந்த நடிகர் சாய் தரம் தேஜ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சாய் தரம் தேஜ் விரைந்து குணமாக கடவுளை வேண்டுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

From around the web