இனியாவது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்! வைரலாகும் சன்னிலியோன்!

 
இனியாவது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்!  வைரலாகும் சன்னிலியோன்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் மட்டுமல்ல பல்வேறு தரப்பிலிருந்தும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இனிமேல் சைக்கிளில்தான் போக வேண்டும் போல நடிகர் அக்‌ஷய் குமார் சைக்கிள் படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது பெட்ரோல் 100 ரூபாயை கடந்த நிலையில் நடிகை சன்னி லியோன் சைக்கிளை ஓட்டும் வகையில் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.

இனியாவது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்!  வைரலாகும் சன்னிலியோன்!

பாலிவுட்டின் ஸ்டாராகி வலம் வரும் சன்னி லியோனின் நடிப்பில் தமிழிலும் இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அத்துடன், சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட மும்பை வாசிகளுக்கு சன்னி லியோன் இந்த ஊரடங்கு காலத்தில் உணவளித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பெட்ரோல் விலை கடைசியில் 100 ரூபாயை கடந்த நிலையில், இனியாவது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இனியாவது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்!  வைரலாகும் சன்னிலியோன்!

பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. பைக், காருக்கெல்லாம் பெட்ரோல் போட்டு கட்டு படியாகாது. எல்லோரும் சைக்கிளுக்கு மாறினால் உடல் ஆரோக்கியமாவது மிஞ்சும் எனத் தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.

From around the web