தேசிய விருது பெற்ற பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!
Jul 16, 2021, 13:26 IST
தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி இன்று காலை தனது 76வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
1978ல் வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான சுரேகா சிக்ரி, அதன் பின்னர் ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர், இருமொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
1988ல் ‘தமஸ்’ மற்றும் 1995ல் ‘மம்மூ’ என்ற திரைப்படங்களில் நடித்ததற்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். ‘பாலிகா வாது’ல் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றுள்ளார்.
சுரேகா சிக்ரியின் மறைவிற்கு திரைப்பட பிரபலங்களும், இந்தி மற்றும் மலையாள சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
From around the
web