அதிர்ச்சி! கொத்து கொத்தாக சிக்கப் போகும் நடிகைகள்!? கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

 
அதிர்ச்சி! கொத்து கொத்தாக சிக்கப் போகும்  நடிகைகள்!? கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மொழி சினிமாக்களிலுமே படத்தின் கதாநாயகிகள் செய்யும் அலம்பல்களுக்கு அளவே கிடையாது. கதாநாயகி, சென்னை ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்றால், ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் பிரியாணி வந்திறங்கிய கதையெல்லாம் இருக்கிறது.

குளிப்பதற்கு கேன் வாட்டர்கள் வராத காலத்திலேயே நீச்சல் குளம் முழுக்க மினரல் வாட்டர் நிரப்ப சொல்லி அதிர வைத்த கதாநாயகி எல்லாம் இருக்கிறார். அதன் பின், அவரை யாரை கண்டுக் கொள்ளவில்லை என்பது தனிக்கதை. விஷயம் அதுவல்ல.

அதிர்ச்சி! கொத்து கொத்தாக சிக்கப் போகும்  நடிகைகள்!? கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020ம் ஆண்டு,போதைப் பொருள் அதிகம் பயன்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் மொத்த சினிமாக்காரர்களையும் அதிர செய்தது. இதன் பின்னர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில் காவல்துறை தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.

அதிர்ச்சி! கொத்து கொத்தாக சிக்கப் போகும்  நடிகைகள்!? கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

நம்மூர் நடிகர் ஷாம் இதில் சிக்கி, சூதாட்ட க்ளப் ரகசியமாக நடத்தியதெல்லாம் விவாதப் பொருளானது. அதே போல, நடிகைகள் நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி உள்ளிட்ட பலரையும் போலீசார், போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் தலைமுடி மாதிரியை ஆய்வுகள் இதனை உறுதி செய்தன. எனவே, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சி! கொத்து கொத்தாக சிக்கப் போகும்  நடிகைகள்!? கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

நிக்கியும், ராகினியும் போதைப் பொருட்கள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு வேகமெடுத்திருக்கிறது. பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், கோலிவுட் என்று அனைத்து வுட்களிலுமே நடிக, நடிகையர் போதைப் பொருட்களை ரகசியமாக உட்கொள்கின்றனர் என்கிற ரீதியில் வேட்டை துவங்கியிருக்கிறதாம். இவர்களை நம்பி கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்திருக்கிறோம். எந்த நடிகை சிக்கினாலும் படத்துக்கு மூடு விழா தான் என்று தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்கள் எங்கே நம்முடைய பெயரை இழுத்து விடுவார்களோ என்கிற கலக்கத்தில், கூடவே பார்ட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நடிகைகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

From around the web