கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு விஜய் சேதுபதி ரூ.25 லட்சம்!!

 
கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு விஜய் சேதுபதி ரூ.25 லட்சம்!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் பாதிப்புக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தடுப்பு மருந்துகள், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு விஜய் சேதுபதி ரூ.25 லட்சம்!!

அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

ஏற்கனவே விக்ரம் ஆன்லைன் மூலம் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய், கவிஞர் வைரமுத்து, அஜித், திமுக எம்.எல்.ஏ.க்கள், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,நடிகர் சிவக்குமார் குடும்பம், ஜிஆர்டி குழுமம் , Zoho கார்ப்பரேஷன், திமுக அறக்கட்டளை , விஜயகாந்த் என பலரும் நிதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web