விபத்து! வேலைக்கு சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி!

 
விபத்து! வேலைக்கு சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி!


காஞ்சீபுரத்தில் வசித்து வருபவர் கர்ணன் . இவர் காஞ்சிபுரம் குன்றத்தூரை அடுத்த நத்தம், கொல்லை தெருவில் உள்ளார். இவருக்கு வயது வயது35. இவர் சென்னையில் லாரியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். அந்த வகையில் இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

விபத்து! வேலைக்கு சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி!


அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சென்னையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து! வேலைக்கு சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி!

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

From around the web