அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக அராஜகம்! பெண்ணை கட்டிப் போட்டு 14 பவுன் நகை திருட்டு!

 
அழைப்பிதழ்  கொடுக்க வந்ததாக அராஜகம்! பெண்ணை கட்டிப் போட்டு 14 பவுன் நகை திருட்டு!

கள்ளக்குறிச்சியில், புதுப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பார்வதி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இரவு 11 மணிக்கு 2 இளைஞர்கள் வீட்டின் கதவை தட்டி அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். படுக்கையில் இருந்து எழுந்து கதவை திறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த 2 வாலிபர்களும் வீட்டிற்குள் புகுந்து, பார்வதியின் கை, கால்களை கட்டி போட்டனர். இதனால் பார்வதி கூச்சலிட்டதால், வாயில் துணியை திணித்தனர். கத்தியை காட்டி மிரட்டி, மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு என 14 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.4,90,000 எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பார்வதியின் வாயில் துணி இருந்ததால் இரவு முழுவதும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தார். காலையில் பார்வதியின் முனங்கல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கை, கால்களில் போடப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்தனர்.

இது பற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web