கோவையில் மீண்டும் அதிர்ச்சி..!! 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி..!!

 
கோவையில் மீண்டும் அதிர்ச்சி..!! 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி, பள்ளியில் மதியம் சாப்பாடு இடைவேளையின் போது மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாணவி சாணி பவுடரை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோவையில் மீண்டும் அதிர்ச்சி..!! 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி..!!

தற்கொலை குறித்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான 37 வயது நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அதனால் மனமுடைந்து தற்கொலை முயன்றதாக மாணவி போலீசார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவி புகார் தெரிவித்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web