அடக்கொடுமையே! பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட மனைவி!! கதறியழுத திமுக பிரமுகர்!

 
அடக்கொடுமையே! பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட மனைவி!! கதறியழுத திமுக பிரமுகர்!

திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா நேற்று தற்கொலை செய்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில், நதியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழன் பிரச்சன்னாவின் மனைவி நதியாவிற்கு நேற்று பிறந்தநாள். பிறந்தநாளிலேயே மனைவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம். ஆனால், இந்த தற்கொலைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தான் எமனாக வந்துள்ளது என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடக்கொடுமையே! பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட மனைவி!! கதறியழுத திமுக பிரமுகர்!

தமிழன் பிரசன்னா, நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி, அந்த புகைப்படங்களை தமிழன் பிரச்சன்னாவின் முகநூலில் பகிர வேண்டும் என்று நதியா தனது ஆசையைக் கணவரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்த கொரோனா கால கட்டத்தில் பிறந்த நாளை எல்லோரையும் அழைத்து எல்லாம் கொண்டாட வேண்டாம் என்று பிரச்சன்னா தெரிவித்துள்ளார். அதனால் மனம் உடைந்த நதியா, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

From around the web