விபத்து! ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு!

 
விபத்து! ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு!

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் தமிழரசன் மகன் கோபாலகிருஷ்ணன் . இவருக்கு வயது 20 இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அடியக்கமங்கலம் ரயில் தண்டவாளத்தில் இளைஞர் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்

விபத்து! ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு!
c

உடனடியாக வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் அடியக்கமங்கலம் முல்லைத்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் கோபாலகிருஷ்ணன் என துப்பு துலக்கப்பட்டுள்ளது.

இவர் ரயில் தண்டவாளத்தை கடந்த போது நாகையில் இருந்த வந்த சரக்கு ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web