பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி! மனைவி இறந்த சில நாட்களிலேயே சோகம்!

 
பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி! மனைவி இறந்த சில நாட்களிலேயே சோகம்!

மனைவி இறந்த சில நாட்களிலேயே திமுக பிரமுகர் பஸ் மோதி இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (51). முன்னாள் நகர மன்ற உறுப்பினரான இவர், திமுகவில், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட வரத்தக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

நேற்று காலை, சின்ன காஞ்சீபுரம் டி.கே. நம்பி தெரு வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது வேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்த்திபனை உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்திபனின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அடுத்த சில நாட்களிலேயே பார்த்திபனும் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web