வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி! திருப்பத்தூரில் வாலிபர் கைது!

 
வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி! திருப்பத்தூரில் வாலிபர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவருக்கு வயது 28. இவர் தன் வீட்டுக்கு அருகில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் பின்புறம் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டதுடன் விக்னேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web