வரன் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு மாப்பிள்ளையால் நேர்ந்த துயரம்..!

 
வரன் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு மாப்பிள்ளையால் நேர்ந்த துயரம்..!

ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன் (49). கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்து விவகாரத்து நடந்துள்ளது.

மூன்றாவதாக திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அதன்மூலம் ஜெயலட்சுமி என்கிற பெண் அவருக்கு அறிமுகமானார். ஒருநாள் யோகநாதனை சந்திக்க ஜெயலட்சுமி வந்துள்ளார். நேரில் அவரை பார்த்ததும் யோகநாதனுக்கு பிடிக்கவில்லை. அதனால் ஜெயலட்சுமியை வீட்டை விட்டு போக சொல்லியுள்ளார்.

வரன் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு மாப்பிள்ளையால் நேர்ந்த துயரம்..!

ஆனால் அந்த பெண் அன்று ஒருநாள் இரவு மட்டும் வீட்டில் தங்கிவிட்டு காலை செல்வதாக கூறியுள்ளார். அதனால் யோகநாதனும் ஜெயலட்சுமியை வீட்டில் தங்கவைத்துள்ளார். காலையில் எழுந்ததும் 10 பவுன் தங்க நகை தரவேண்டும், அப்போது தான் வீட்டை விட்டு போவேன். இல்லையென்றால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக ஊரை கூட்டி கூறுவேன் என்று ஜெயலட்சுமி மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யோகநாதன் ஜெயலட்சுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வெளியே வீசிவிட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அதன்மூலம் பெண் தொடர்பான விபரங்களும், யோகநாதன் தான் அவரை கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து யோகநாதனை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

From around the web