கரூர் மாணவிக்கு பாடம் எடுத்த கணித ஆசிரியர் தற்கொலை..!!

 
கரூர் மாணவிக்கு பாடம் எடுத்த கணித ஆசிரியர் தற்கொலை..!!

பாலியல் துன்புறுத்தல் காரணமாக கரூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவருடைய கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19-ம் தேதி கரூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

கரூர் மாணவிக்கு பாடம் எடுத்த கணித ஆசிரியர் தற்கொலை..!!

அதில் ”பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஆனால் வெளியே சொல்ல பயமாக உள்ளது” என்று மாணவி கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் மாணவி படித்து வந்த பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த சரவணன் திருச்சி செங்காட்டுப்பட்டியிலுள்ள உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கரூர் மாணவிக்கு பாடம் எடுத்த கணித ஆசிரியர் தற்கொலை..!!

கரூரில் குடும்பத்தினர் இருக்கும் போது எதற்காக இவர் திருச்சி வந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். மாணவி இறப்புக்கும் இவருடைய தற்கொலைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது இவ்விவகாரம் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

From around the web