சுடுகாட்டுக்கும் பாதையில்லை! சொல்லியும் பலனில்லை! விளைநிலங்களின் வழியே உடலை தூக்கிச் செல்லும் அவலம்!

 
சுடுகாட்டுக்கும் பாதையில்லை! சொல்லியும் பலனில்லை! விளைநிலங்களின் வழியே உடலை தூக்கிச் செல்லும் அவலம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, நன்னாவரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் மயானத்துக்கு போதிய சாலை வசதி அமைக்கப்படவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் பாடை கட்டி மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

சுடுகாட்டுக்கும் பாதையில்லை! சொல்லியும் பலனில்லை! விளைநிலங்களின் வழியே உடலை தூக்கிச் செல்லும் அவலம்!

ஆனால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதை சரியாக இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை விளை நிலங்கள் வழியாக மிகவும் சிரமப்பட்டு எடுத்துச் சென்றனர். இதனையடுத்து இப்பகுதி கிராம மக்கள் நன்னாவரம் கிராமத்தில் மயானத்துக்கு செல்ல உடனடியாக சரியான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web