நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை!

 
நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை!

நடிகர் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை!

வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்ததுடன், நடிகர் விஜய், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் அபராதமாக கட்டவேண்டுமென உத்தரவிட்டார்.

நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அனைவர் மத்தியிலும் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web