மதுரைக்காரங்க…! ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை!

 
மதுரைக்காரங்க…! ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள சாப்டூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராஜா. இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி.

இவர்கள் உறவினர்கள் உள்ள சின்ன கட்டளை கிராமத்தில் நடந்த பொங்கல் திருவிழாவிற்காக சென்று ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் அவரது மாமியார் மட்டும் தனியாக இருந்த நிலையில் 100 நாள் வேலைக்காக அவரும் காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.

மதுரைக்காரங்க…! ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை!

திருவிழாவிற்கு சென்ற லட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 29 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மதுரைக்காரங்க…! ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை!

இதுகுறித்து உடனே சாப்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 29 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web