மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

 
மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

வீட்டு திரும்பிய பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அம்மாணவி கடிதம் எழுதியுள்ளார். அதில் “யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என தம் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

இது குறித்து நடத்தப்பட்ட காவல்துறையின் விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

மேலும் மனைவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டப்பிரிவு 21-ன் கீழ் (புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தவறியதற்காக தண்டனை) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானதை தொடர்ந்து அவரை பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு) அழைத்து வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

From around the web