கோவை மாணவி தற்கொலை..!! ஆசிரியருக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்..!!

 
கோவை மாணவி தற்கொலை..!! ஆசிரியருக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்..!!

கோவையில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனையும் காவல்துறை கைது செய்தது.

கோவை மாணவி தற்கொலை..!! ஆசிரியருக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்..!!

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தை வேறு ஏதாவது மாணவியிடமும் அத்துமீறியுள்ளாரா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக போலீஸ் காவல் கேட்டு கோவை போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை மனுதாக்கல் செய்தனர்.

இன்று காலை நடைபெற்ற விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

From around the web