சிகரெட்டால் வந்த பிரச்சனை! கடைக்காரரை அடித்தேக் கொன்ற இளைஞர்கள்!

 
சிகரெட்டால் வந்த பிரச்சனை! கடைக்காரரை அடித்தேக் கொன்ற இளைஞர்கள்!

மதுரை மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர் வினோத். இவர் அதேபகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் சிகரெட் வாங்க வந்துள்ளனர்.

தங்களிடம் பணம் கிடையாது என்றும், அதனால் சிகரெட்டை கடனுக்கு தருமாறும் இளைஞர்கள் கேட்டதால் கடைக்காரர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர்கள் ஏற்கனவே கடனுக்கு சிகரெட் வாங்கிவிட்டு பாக்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பழைய பாக்கியை கொடுத்துவிட்டு சிகரெட் வாங்கிச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

சிகிரெட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். வினோத் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதை கண்ட பொதுமக்கள் இளைஞர்களிடமிருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்ததால் வினோத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வினோத்தை தாக்கிய 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web