திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் – சேய்நல மருத்துவமனையில் தீ விபத்து! உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

 
திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் – சேய்நல மருத்துவமனையில் தீ விபத்து! உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் 2வது தளத்தில் மகப்பேறு வார்டு செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கும் புதிதாக பிறந்துள்ள பச்சிளம் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் – சேய்நல மருத்துவமனையில் தீ விபத்து! உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

அந்த வகையில் 36 பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அந்த வார்டில் டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து திடீரென்று வந்த கரும்புகையால் சிறிது நேரத்தில் குபுகுபுவென அந்த அறை முழுவதும் பரவ தொடங்கியது.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் – சேய்நல மருத்துவமனையில் தீ விபத்து! உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

இதனால் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், 36 குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கரும்புகையால் மூச்சுத்திணறலும் ஏற்பட தொடங்கியதால் உடனடியாக அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனடியாக கீழ்த்தளத்தில் இருந்த மருத்துவமனை ஊழியர்களும் சக நோயாளிகளும் வேகமாக மேலே சென்று 36 குழந்தைகளையும், அந்த குழந்தைகளின் தாய்மார்களையும் பத்திரமாக மீட்டனர். மருத்துவமனை ஊழியர்களின் சமயோசித செயலாலும் உடனடி நடவடிக்கைகளாலும் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 36 பச்சிளம் குழந்தைகள் எந்த தீக்காயமும் இன்றி தப்பின.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் – சேய்நல மருத்துவமனையில் தீ விபத்து! உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக விரைந்து வந்து தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு தாய்மார்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். தீயை அணைத்த மருத்துவமனை ஊழியர்களையும் வெகுவாக பாராட்டினர்.

From around the web