காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்- பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம கும்பல்..!

 
காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்- பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம கும்பல்..!

மதுரையில் இருந்து திருப்பூரை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. கோச்சாடை என்கிற பகுதியில் சென்ற போது பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு கார் வந்துள்ளது.

பேருந்து மெதுவாக சென்றதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். அது மிகவும் குறுகலான சாலை என்பதால் பேருந்து மெதுவாக செல்வதை அறிந்திடாத கார் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்- பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம கும்பல்..!

ஒருகட்டத்தில் பேருந்தை அந்த கார் முந்திச் சென்று நின்றது. காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஓட்டுநரை தாக்க துவங்கியது. பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, ஓட்டுநர் முத்துகிருஷ்ணன்
மீது கற்கள் வீசப்பட்டன.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பின்னால் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து தாக்குதலை தடுத்தனர். மர்ம கும்பலிடம் இருந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை மீட்டனர். இந்த சம்பவம் மதுரை சுற்றுவாட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web