உஷார்! வீடியோ காலில் ஜாலியா பேசலாம் ! வலை வீசும் பெண்கள்!

 
உஷார்! வீடியோ காலில் ஜாலியா பேசலாம் ! வலை வீசும் பெண்கள்!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் இன்றி வாழ்க்கையே இன்றி வாழ்க்கையே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தே பணி, பாடங்கள் என உபயோகமாக பலர் உபயோகித்து வருகின்றனர். அதே நேரம் ஒரு கும்பல் ஆபாச தகவல்களையும் பரப்பி வருகிறது. அதனால் இன்றைய இளைஞர்கள் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முகநூல் பக்கங்களில் திடீரென ஆபாச முகநூல் பக்கங்களும் எட்டிப் பார்ப்பது உண்டு. விதவிதமான கவர்ச்சி பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த பக்கங்களின் முகப்பில் கவர்ச்சியான சுண்டி இழுக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் இளம்பெண்கள் பலரின் கவர்ச்சிப் புகைப்படங்கள் பரவி கிடக்கும். மேலும் தனிமையில் இருக்கிறேன். வீடியோ கால் செய்தால் பேசலாம் என்கிற கவர்ச்சி வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

இதே போன்று அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் முதலில் ஹாய் என்பதில் தொடங்கி திடீரென அறிமுகம் இல்லாத எண்களின் இணைப்பு வரலாம். இதனை நம்பி வீடியோ கால் செய்து பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.

இதை தவிர ஆபாச இணையதளங்களில் லைவ் வீடியோ பார்க்கலாம் என்ற அழைப்புக்களும் வரத் தொடங்கியுள்ளன. இந்த அழைப்பை ஏற்க பணம் கட்டி தேவையில்லாத சிக்கலில் சிக்கிக் கொள்பவர்களும் ஏராளம். இந்த முறையில் ஆபாசமாக தோன்றி பணம் பறிக்கும் கும்பல் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வகையான மெசேஜால் கவர்ந்து இழுக்கப்பட்ட வில்லிவாக்கம் இளைஞர் சம்பந்தப்பட்ட பெண்ணின் வாட்ஸ்-அப் நம்பரில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் மிகுந்த ஆபாசமாக காட்சி அளித்து பேசியுள்ளார். சற்று நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் வில்லிவாக்கம் இளைஞரின் செல்போனுக்கு ‘ஸ்கீரின் சாட்’ ஒன்று வந்தது. அதில் இளைஞர் ஆபாசமாக பெண்ணை ரசித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன. பெண்ணின் ஆபாச வீடியோவை ரசித்த உங்களது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம். நாங்கள் சொல்கிறபடி கேட்க வேண்டும் எனவும், நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் ரூ.50,000 பணம் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பயந்து நடுங்கிய வில்லிவாக்கம் இளைஞர் உடனடியாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.50,000/-பணத்தை செலுத்தியுள்ளார்.

உஷார்! வீடியோ காலில் ஜாலியா பேசலாம் ! வலை வீசும் பெண்கள்!

இது தொடர்ந்ததால் வேறு வழி தெரியாமல் அதிர்ச்சி அடைந்த இளைஞர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். குறிப்பிட்ட அந்த பெண் குஜராத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் பல்வேறு பெயர்களில் இளைஞர்களுக்கு ஆபாச வலை வீசி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உஷார்! வீடியோ காலில் ஜாலியா பேசலாம் ! வலை வீசும் பெண்கள்!

அவர் பல இளைஞர்களிடம் பணம் பறித்து இருப்பதும், பயந்த சுபாவம் உள்ள பெரும்பாலானவர்கள் புகார் செய்யாமல் அப்படியே விட்டு விடுவார்கள். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உயர்அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில் “இதுபோன்று பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் உள்ளன. ஆபாச வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இதனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது தேவையில்லாத அழைப்புகளை முழுமையாக தவிர்த்து விட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்-அப், பேஸ்புக் இவற்றில் வரும் தேவையில்லாத விளம்பரங்கள், ஆபாச இணையதளங்களை தவிர்த்து விட வேண்டும். இதன்மூலம் மோசடி நபர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

From around the web