இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!

 
இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னை ரயில்வே கோட்டம், மின்சார ரயில் சேவையை அதிகரிப்பது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!

அதன்படி ஜூன் 7முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில்களும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில்களும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில்களும் மொத்தமாக 323 மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!


அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில்களும்,பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில்களும் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில்களும், ஜூன்20 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web