தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

 
தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மற்றும் கன மழை காரணமாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் முதல் கட்டமாக 12,000 கன அடி நீரும், கடந்த 15 ஆம் தேதி 21,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து 3-ம் கட்டமாக ஜூலை 22 ஆம் தேதி 37,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் ஜூலை 24 ஆம் தேதி தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக 7,000 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், இன்று 17,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்திற்கு இன்று திறந்து விடப்பட்டுள்ள நீர் ஜூலை 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web