ரூ 17,00,000 கொள்ளை ! வளைத்து பிடித்த போலீசார்!

 
ரூ 17,00,000 கொள்ளை ! வளைத்து பிடித்த போலீசார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் வீரமுத்து. இவருக்கு வயது 48. இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மர்மநபர்கள் வீரமுத்துவின் வீட்டில் புகுந்து ரூ.17,00,000 ரொக்கம் மற்றும் 3 பவுன் நகைகள், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வீட்டிற்கு திரும்பி வந்த வீரமுத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து சின்னசேலம் பகுதியை சேர்ந்த அஜித், அம்பிகா, சீனிவாசன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.50,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

ரூ 17,00,000 கொள்ளை ! வளைத்து பிடித்த போலீசார்!

மேலும் இந்த கொள்ளை வழக்கில் சேலம் வித்யா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி, பொன்னம்மா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லெனின், வாழப்பாடி பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் அசோக்குமார் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக இருப்பதால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டது.

இந்த தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிரடியாக காயத்ரி, லெனின், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.8,85,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

From around the web