11ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தகராறு! இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை!

 
11ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தகராறு! இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை!

படப்பை அருகே தூக்குப் போட்டு கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சோபன்ராஜ். இவருடைய மனைவி தமிழரசி (34). இந்த தம்பதியர்களுக்கு கீதா, ஹரிணி என்று இரு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கீதா (15), 11-ம் வகுப்பும், ஹரிணி (10), 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீதா செல்போனை அதிக நேரம் உபயோகித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து கீதாவின் தாய் தமிழரசி கீதாவைக் கண்டித்துள்ளார். தனது தாயார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தன்னைக் கண்டித்ததால், கோபத்தில் கீதா, இரவு உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து விட்டார். இதனை தொடர்ந்து அடுத்த நாள் காலை முதல் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தமிழரசி, தனக்கு தானே சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

From around the web