காஞ்சிபுரத்தில் பேருந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலி!

 
காஞ்சிபுரத்தில் பேருந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலி!


காஞ்சீபுரத்தில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன். இவருக்கு வயது 51. தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர். தற்போது காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட வரத்தக அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் டி.கே. நம்பி தெருவில் காலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

காஞ்சிபுரத்தில் பேருந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலி!

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்த்திபனை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் பேருந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலி!

முதலுதவிக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்ன காஞ்சிபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.உயிரிழந்த பார்த்திபனின் மனைவி சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web