அதிர்ச்சி! ஒரே இடத்தில் 33 குழந்தைகளுக்கு கொரோனா !

 
அதிர்ச்சி! ஒரே இடத்தில்  33 குழந்தைகளுக்கு கொரோனா !

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் மறுபடியும் தமிழகத்தில் திருமண நிகழ்ச்சி, இறப்பு நிகழ்வுகளில் கூடும் கூட்டம் மூலம் கொரோனா பரவி வருவதாக செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தனியார் காப்பகத்தில் 33 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அமைந்துள்ள கலியாம்பூண்டி கிராமத்தில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 33 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் காப்பகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த காப்பகத்தை சேர்ந்த குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

From around the web