அதிர்ச்சி! குடலில் மறைத்து வைத்தியிருந்த 550 கிராம் தங்கம் பறிமுதல்

 
அதிர்ச்சி! குடலில் மறைத்து வைத்தியிருந்த 550 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்ஷார்ஜாவிலிருந்து G9-471 விமானம் மூலம் சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி முருகேசன் என்ற பயணியிடம், சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 648 கிராம் எடையுள்ள தங்கப்பசை அவரது குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 550 கிராம் எடையுள்ள, ரூ.27.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web