ஆபாச படம் எடுத்து நகை, பணம் பறித்த மாணவன்!

 
ஆபாச படம் எடுத்து நகை, பணம் பறித்த  மாணவன்!

காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 11ம் வகுப்பு மாணவர். அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும்மாணவியிடம் நட்புடன் பழகி வந்தார்.

இவர்கள் இருவரும் தனியிடங்களுக்கு சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன் அந்த மாணவியிடம் நகை, பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். மாணவி கொடுக்க மறுத்தவுடன் தன்னுடன் செல்போனில் நெருக்கமாக ஆபாசமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த மாணவி வீட்டில் யாருக்கும் தெரியாமல் நகை, பணம் இவற்றை திருடி மாணவருக்கு கொடுத்துள்ளார்.

சில நாட்களில் நகை பணம் காணாமல் போனது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக கைது செய்யப்பட்ட மாணவர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

From around the web