பாய்ந்து சென்று மோதிய சொகுசு கார்! கரூரில் சம்பவ இடத்திலேயே பேராசிரியை பலி!

 
பாய்ந்து சென்று மோதிய சொகுசு கார்! கரூரில் சம்பவ இடத்திலேயே பேராசிரியை பலி!

பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராமலட்சுமி. இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு வேது என்ற மகன் இருந்துள்ளார். தற்போதுள்ள கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாகவும் ஆன் லைன் கல்வி முறையில் தான் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால், ராமலட்சுமி குடும்பத்தினர், தம்பதியினர் மகனையும் அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு தங்களது சொகுசு காரில் சென்றுள்ளனர்.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர்களது கார் கரூர் ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதி பாய்ந்து, பறந்து தலைக்குப்புற உருண்டு விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேராசிரியை ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் கணேசனும், மகன் வேதும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த விபத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக அரவக்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின், உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கணேசனையும், வேதுவையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

From around the web