இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பகுதிகளில் மின் தடை!
Jul 27, 2021, 07:09 IST
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்ப்பிற்காக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அரசர்குளம், மாங்குடி, நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி, அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
From around the
web