அதிர்ச்சி! புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்த 4 மாத குழந்தை !

 
அதிர்ச்சி! புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்த 4 மாத குழந்தை !

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.புதுக்கோட்டையில் மட்டும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,665 பேர் . குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர் அதிகம் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது.

அதிர்ச்சி! புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்த 4 மாத குழந்தை !


இந்நிலையில் புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று கொரோனாவிற்கு உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரியில் வசித்துவரும் ஒரு தம்பதியரின் 4 மாத குழந்தை மே 27ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தமிழகத்தில் மிகக்குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இதுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

From around the web