பரபரப்பு! ஒரே இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்!

 
பரபரப்பு! ஒரே இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வடக்கு தாராநல்லூர் சூரஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி. இவருக்கு வயது 27. இவர் இரவு 9.30 மணி அளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது மது போதையில் வந்த இரண்டு பேர் அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த சின்னத்தம்பி தீவிர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இதே போல திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராம்குமார். இவரையும் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தி விட்டும் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் பாலக்கரை, ஸ்ரீரங்கம், உறையூர் போலீஸ் நிலைய பகுதிகளிலும் நேற்று இரவு அடிதடி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட மறுநாளே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

From around the web