எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!
Jun 16, 2021, 11:49 IST
தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட அளவு மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு தினமும் இரு மார்க்கங்களிலும் பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே திருச்சி செல்லும் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் இன்று முதல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. இதனையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கும், மணப்பாறையில் இருந்து மாலை 6.40 மணிக்கும் புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
From around the
web