மதுப்பிரியர்கள் அச்சம்! அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் குப்பை!

 
மதுப்பிரியர்கள் அச்சம்! அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் குப்பை!

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் படையப்பா என்ற செல்வராஜ். இவர் தனது நண்பருடன் கயர்லாபாத் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபாட்டில்களை விலை கொடுத்து வாங்கினார்.

அந்த பாட்டில்களில் ஒன்றில் மட்டும் ஏதோ கருப்பாக உருண்டையாக குப்பை போன்று தென்பட்டது. இதுகுறித்து , டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் சென்று முறையிட்டதில் வேண்டுமானால் வேறு மதுபாட்டில் வாங்கிச் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் செல்வராஜ், கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொரோனா காலத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பொதுமக்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அரசு டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபாட்டிலில் குப்பை கிடந்தது, மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web