இன்று திருச்சி கல்லணையில் தண்ணீர் திறப்பு! அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு!

 
இன்று திருச்சி கல்லணையில் தண்ணீர் திறப்பு! அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் அணையில் கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்த காவிரி நீர், நேற்று முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இன்று கல்லணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருச்சி, முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்தது. இந்தத் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கொம்பில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், கல்லணையை அடைந்த நிலையில், இன்று காலை டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இன்று காலை இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் தண்ணீரை திறந்து வைக்கின்றனர்.

From around the web