தாள முடியாத வயிற்று வலி! விபரீத முடிவு எடுத்த இளைஞர்!

 
தாள முடியாத வயிற்று வலி! விபரீத முடிவு எடுத்த இளைஞர்!

திருநெல்வேலியில் மானூர் அருகே உள்ள அலவந்தான்குளத்தில் வசித்து வருபவர் குணசிங். இவருடைய மகன் இருதயராஜ் . இவருக்கு வயது 26. இவர் நெடு நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது.

தாள முடியாத வயிற்று வலி! விபரீத முடிவு எடுத்த இளைஞர்!


இதனால் மனமுடைந்த இருதயராஜ் இரவு தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாந்தி, மயக்கத்தை கண்டு சந்தேகப்பட்ட அவருடைய சகோதரர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலனின்றி இருதயராஜ் இறந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web