துணிகரம்! டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!

 
துணிகரம்! டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!

தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பை தென்காசி மெயின்ரோடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகில் டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு கடை பூட்டப்பட்டது.

துணிகரம்! டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!

இரவு கடையின் பின்பக்க சுவரில் உள்ள கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து ரூ.10,230/- மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து கடையின் மேற்பார்வையாளர் உடனடியாக அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மர்ம நபர்கள் கடையின் பின்புற சுவரில் உள்ள இரும்பு கம்பியை வளைத்து, சிமெண்டு சிலாப்பை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் விற்பனை தொகை ரூ 5லட்சத்தை கடை மேற் பார்வையாளர் வங்கியில் செலுத்துவதற்காக கையில் எடுத்துச்சென்று விட்டார். இதனால் அந்த பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.

இந்த கொள்ளை குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web