மனைவி இறந்த சோகம்! தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

 
மனைவி இறந்த சோகம்! தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

திருப்பத்தூர் மாவட்டம் பி.முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் திருப்பத்தூரைச் சேர்ந்த அழகு கலை நிபுணரான சுஜாதா (48) என்பவருக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு தீபக் (29) என்ற மகனும், தீப்தி (26) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சுஜாதாவுக்கும் அவரது மகன் தீபக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டு, சுஜாதா மகனிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். தாய் வீட்டிற்கு சென்ற சுஜாதாவுக்கு அங்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களிடம் சென்ற போது, கர்ப்பப்பை பலகீனமாக இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.

கணவர் புருஷோத்தமன் தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து கிருஷ்ணகிரிக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மனைவியை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்ல வீட்டிற்கு வந்த போது, தன்னுடைய மனைவி சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர், சுஜாதாவின் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பர்கூர் போலீசார் அங்கு சென்று சுஜாதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்த சோகத்தில், கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கணவர் புருஷோத்தமன் யாரிடமும் பேசாமல் சோகத்துடன் அழுது கொண்டிருந்துள்ளா. மகனிடம் பேசாமல் இருந்த புருஷோத்தமன், நள்ளிரவு 2 மணிக்கு வீட்டின் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டது அந்த பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

எங்கே சென்றாலும், கணவன், மனைவி ஜோடியாக தான் செல்வார்கள். இப்போது சாவிலும் இருவரும் ஜோடியாக சென்று விட்டனர் என்று அந்த பகுதியினர் கண்ணீர் வடித்தனர்.

From around the web