சின்னப் பசங்க பஞ்சாயத்து! தடுக்க சென்ற வாலிபர் கொலை! 3 சிறுவர்கள் கைது!

 
சின்னப் பசங்க பஞ்சாயத்து! தடுக்க சென்ற வாலிபர் கொலை!  3 சிறுவர்கள் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் திலகர். இவருடைய மகன் பிரவீன். இவருக்கு வயது 20. இவர் ஒரு பனியன் தொழிலாளி. இவர் தன்னுடைய நண்பனை பார்க்க சென்றிருந்தார். அப்போது அருகில் மொபைலில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதனை பிரவீன் தடுத்து நிறுத்தியதால் சிறுவர்கள் ஆத்திரமடைந்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் வயிற்றில் குத்தி விட்டான்.

இதனால் காயமடைந்த பிரவீனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வீரபாண்டி கெம்பேநகரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 15 வயதான கிஷோர் ,17 வயதான யூசப் மற்றும் 21 வயதான கார்த்திக் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் 3பேரும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிஷோர் தருணுடன் விளையாடி கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தருண், கிஷோரை மிரட்டவே ஆத்திரமடைந்த கிஷோர் தனது நண்பர்களான யூசப், கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்து தருணிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கார்த்திக் தான் வைத்திருந்த கத்தியால் பிரவீனை வயிற்றில் குத்திக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து கிஷோர், யூசப் இருவரும் பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையிலும், கார்த்திக் திருப்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

From around the web